புதிய தேசிய கல்விக்கொள்கை என்ற பெய ரில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை கல்வித்துறையை வணிகமயம், காவி மயம் ஒன்றிய அதிகாரக் குவிப்பு மயமாக மாற்றி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கல்வி யாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது உண்மை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணமாகி வருகிறது.
என்சிஇஆர்டி புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் பாடப்புத்தகங்களை அறிவிய லுக்கும், வரலாற்றுக்கும் புறம்பான வகையில் காவிமயமாக்கி வருகிறது. உதாரணமாக 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பல்வேறு பகுதிகள் நீக்கப்பட்டு வேதங்கள், புராணங்கள், மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இதன் உச்சக்கட்டமாக ஹரப்பா நாகரிகம் என்பதற்குப் பதிலாக சிந்து-சரஸ்வதி நாகரிகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் என்பது கவனம் பெற்றுள்ள நிலையில் இடைச்செருகலாக சரஸ்வதி நாகரிகம் என பெயர்மாற்றம் செய் யப்படுகிறது. ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோ நாகரிகம் சிந்துச் சமவெளி நாகரிகம் என்றுதான் அழைக்கப்படுகிறது. சரஸ்வதி நதி நாகரிகம் என்பதற்கு எந்த வரலாற்று ஆதா ரமும் இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் ஆசாமி கள் சரஸ்வதி நாகரிகம் என வம்படியாக கூறி வருகின்றனர். சரஸ்வதி நதி குறித்து வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்றும் அது மானசீக நதி என்றும் கூறுகின்றனர். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கட்டுக்கதைகளை ஏற்பதில்லை. பிஞ்சு நெஞ்சில் நஞ்சைக் கலப்பது போல தங்களது கட்டுக்கதைகளை பாடப்புத்த கங்களில் இடம்பெறச் செய்வது வரலாற்றுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.
வேதம், புராணம் குறித்த செய்திகளை இணை க்கும் அதே நேரத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்த பாடத்தை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கி யுள்ளனர். 9 முதல் 12 வகுப்பு வரையிலான அர சியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மறைத்து பாபர் மசூதி என்ற வார்த்தையையே தவிர்த்து மூன்று குவிமாடங் களைக் கொண்ட கட்டிடம் என்று மட்டும் கூறப் பட்டுள்ளது. குஜராத் வன்முறை தொடர்பான செய்திகளும் நீக்கப்பட்டது ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளானது. இந்திய வரலாற்றை இந்துத்துவா நோக்கில் திருத்தி எழுத முயல்வது ஆபத்தானதாகும்.
உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் லட்சணத்தை நீட் தேர்வு மோசடி வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த கல்வித்துறையை சீரழிக்கும் ஆர்எஸ்எஸ் பரி வாரத்தின் அத்துமீறல்களையும், வரலாற்றுத் திரிபு களையும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.